கற்றல் மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்துங்கள்

வாசிப்பு, கேட்டல் அல்லது கருத்தரங்குகளில் கலந்துகொள்வது எதுவாக இருந்தாலும், Hora Ministries இரட்சிப்பின் வரலாற்று தொடர், தேவனோடு இன்னும் நெருக்கமான ஒரு பயணத்தில் உங்களை வழிநடத்துகிறது

புத்தகங்களை ஆராயுங்கள்

எங்கள் புத்தகங்கள்

இரட்சிப்பின் வரலாற்று தொடர்

நூல் 1

(Tamil Book 1) – ஆதியாகமத்தின் வம்சவரலாறு

மீட்பின் வரலாற்றில் தேவனின் ஆளுகை

நூல் 2

(Tamil Book 2) – அக்கினிஜுவாலையின் உடன்படிக்கை

விடுதலைப் பயணம் மற்றும் வனாந்தரப் பயண வரலாற்றில் மறக்கப்பட்ட அனுபவம்

நூல் 3

(Tamil Book 3) – உடன்படிக்கையின் அணையா விளக்கு

இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் முதல் பதினான்கு தலைமுறைகள்

நூல் 4

(Tamil Book 4): தேவனின் ஆழமான மற்றும் விளங்கிக்கொள்ள முடியாத கிருபைஅருள்

தாவீது காலத்திலிருந்து பாபிலோனிய சிறைபிடிப்பு வரை இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது

நூல் 5

(Tamil Book 5): நித்திய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம்

இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் (இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து விடுதலையானது முதல் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையிலும்) வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய மகத்தான வழிநடத்துதல்

நூல் 6

(Tamil Book 6): உடன்படிக்கை ஆணையின் நித்திய பிரதான ஆசாரியர்

ஆரோனிலிருந்து பினெகாஸ் வரையிலான 77 தலைமுறை பிரதான ஆசாரியர்களின் வரலாறு

நூல் 7

(Tamil Book 7): எல்லா தலைமுறையினருக்குமான நித்திய உடன்படிக்கை: பத்து கற்பனைகள்

மீட்பின் வரலாற்றில் தேவனின் ஆளுகை

நூல் 8

(Tamil Book 8) – COMING SOON விரைவில் வருகிறது

Ten Plagues, Exodus, and Entry Into Canaan

நூல் 9

(Tamil Book 9) – COMING SOON விரைவில் வருகிறது

The Details of the Tabernacle and the Ark of the Covenant and Its History of Movement

நூல் 10

(Tamil Book 10) – COMING SOON விரைவில் வருகிறது

Cosmic Blessing to Abraham and Redemptive Fulfillment Through His Obedience

நூல் 11a

(Tamil Book 11A) – COMING SOON விரைவில் வருகிறது

The Ideal Look of the New Temple Shown to Ezekiel and the Mysterious Administration of Redemption Contained Within it

நூல் 11b

(Tamil Book 11B) – COMING SOON விரைவில் வருகிறது

The Building Process of Zerubbabel’s Temple and the Walls of Jerusalem, the Mysterious Redemptive Administration in the Genealogies of the…

சான்றுகள்

தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்

“இந்தப் புத்தகம் அவருடைய மகத்தான ஊழியம் மற்றும் அவர் போதிக்கும் பெரிய சபைக்கான காரணத்தை விளக்குகிறது... வேதாகமத்தை கவனமாகப் படிப்பது... வேதாகமத்தைப் பற்றிய நுண்ணறிவுமிக்க, ஆழமான புரிதலைக் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டது... இது உண்மையிலேயே சிருஷ்டிப்பின் தோற்றம் அல்லது ஆதியாகமம் ஆகியவற்றைக் காட்டிலும் மேலானவற்றைப் பற்றி பேசும் ஒரு படைப்பு... Rev. பார்க், முற்பிதாக்களின் வம்சவரலாறுகளிலிருந்து வரலாற்று இரட்சிப்பு மற்றும் மீட்பின் பெரும் அடித்தளத்தைக் கண்டுபிடித்தார்... இந்த கண்ணோட்டம், அவரது வாசகர்கள் முற்பிதாக்களின் கதைகளை அவர்களின் வாழ்க்கையின் கதைகளின் வெளிச்சத்தில் மட்டுமல்லாமல், வரலாற்றில் உள்ள தற்போதைய தலைமுறையுடனான அவர்களின் தொடர்பிலும் ஒரு தொல்பொருளாகப் பார்க்கவைக்கிறது. வேதாகமத்தை ‘என் கதை’ புத்தகமாக மாற்றியது இந்தப் புத்தகத்தின் மிகச்சிறந்த சாதனை.”

—டாக்டர். கியுங்-பே மின், Th.D. கௌரவப் பேராசிரியர், யோன்செய் பல்கலைக்கழகம், சியோல்

“வேதாகமத்தின் ஆவிக்குரிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறது... தேவனின் உலகம் அறிதாகிவிட்ட இந்த கொந்தளிப்பான காலங்களில் தேவன் நமக்கு அனுப்பிய மொழியின் ஞானி Rev. பார்க் அவர்கள்... அவர் பேசும் அதிக விவாதங்கள் இறையியலாளர்களால் கூட எளிதில் உரையாற்ற முடியாது... ஒரு அற்புதமான மற்றும் கொண்டாடப்பட்ட சாதனை... உலகின் அனைத்து சபைகளுக்கும் நான் ஆதியாகமத்தின் வம்சவரலாறு புத்தகத்தை மகிழ்ச்சியுடன் பரிந்துரைக்கிறேன், ஏனெனில் இது கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய ஆசைகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், விசுவாசத்தின் முதிர்ந்த வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு இது முற்றிலும் அவசியமான ஒன்றாகும்.”

—டாக்டர். ஆண்ட்ரூ ஜே. டெலசியோ, Ph.D. தலைவர், ரிசேர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிபார்ம்ட் தியாலஜி, லாஸ் ஏஞ்சல்ஸ்

“இன்று வரை, எந்த இறையியல் வல்லுநரும் அல்லது ஊழியரும் இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் மீட்பின் வரலாற்று நிர்வாகம் சம்பந்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் வரலாற்றை ஆராய்கிற பணியை மேற்கொள்ளவில்லை.”

—டாக்டர் யோங்-சு யே சபைகள் மற்றும் ஊழியங்களின் சர்வதேச சங்கத்தின் தலைவர்

“புரியும்படி சொன்னால், உடன்படிக்கையும் மீட்பின் வரலாறும்தான் அவரது இறையியல். வேதாகமம் உடன்படிக்கைகளின் புத்தகம்; அவற்றில் முக்கியமானது ஆதியாகமம் 3:15- ல் ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சிக்கு பிறகு கொடுக்கப்பட்ட ஸ்திரீயின் வித்து குறித்த வாக்குத்தத்தமாகும். இயேசு கிறிஸ்து வந்து, புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிற வரையில் தேவன் தம் உடன்படிக்கையை புதுப்பித்துக்கொண்டே இருந்தார். இதை இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாறு மூலமாக ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.”

—பேராயர் குவாங்-யங் ஜாங் கொரியாவில் உள்ள மெதடிஸ்ட் சபையின் பேராயர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்

“நான் தனிப்பட்ட முறையில் இதுவரை 40 புத்தகங்களை எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்னை விட முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருப்பதைக் கண்டேன். எனது எழுத்து ஒரு அறிவார்ந்த ஆய்வு என்றால், இந்த புத்தகத்தில் உள்ள ஆசிரியரின் எழுத்து முழு வேதத்தையும் ஊடுருவிய ஒரு ஆழமான ஆவிக்குரிய ஆய்வு ஆகும். மீட்பின் வரலாறு என்பது வேதத்தைப் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் ஆழமான நுண்ணறிவு இல்லாமல் சாத்தியமற்ற ஒன்று. இயேசுவின் வம்சவரலாற்றின் சில பகுதிகளை அவரைப் போல வெளிப்படுத்துவது வேறு எந்த அறிஞரும் அல்லது இறையியலாளர்களும் இதுவரை செய்யாத ஒன்று. இந்தப் புத்தகத்தின் மூலம், உலகம், சபை மற்றும் கல்வியாளர்கள் பின்பற்ற வேண்டிய விசுவாசப் பாதையை ஆசிரியர் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார். ஆவிக்குரியப் பஞ்சத்தால் வாடிய கொரிய திருச்சபைக்கு இந்நூல் ஆசீர்வாதங்களின் இனிய மழையாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

—டாக்டர். யோங்-குக் வோன் அன்யாங் பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் கொரிய வேதாகம தொல்பொருள் சங்கத்தின் ஆலோசகர்

“மீட்பின் வரலாறு பாடத்தொடரில் டாக்டர் ஆபிரகாம் பார்க் அவர்களுடைய வாழ்க்கை பணி அவருடைய ஆழமான சீர்திருத்த விசுவாசத்தின் ஊற்றுகளிலிருந்து ஆழமாக எடுக்கப்பட்டது. மற்ற எந்தக் கருத்தையும்விட உடன்படிக்கை இறையியலில் அந்தச் சீர்திருத்த போதகருடைய அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு தலைப்பானது, வேதாகமத்தின் ஒற்றை அதிகாரத்தையும், உடன்படிக்கையில் தம்முடைய இரட்சிப்பின் நோக்கத்தை நிறைவேற்ற வரலாறு முழுவதையும் வழிநடத்துவதில் தேவனுடைய தனித்துவமான மகத்துவத்தையும், அதே போல் ஒரு கன்னிகையிடத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவே மனுகுலத்தின் ஒரே இரட்சகர் என்கிற அவருடைய தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. சீர்திருத்த இறையியலுக்கும், விசுவாச அறிக்கை இறையியலுக்கும் எவையெல்லாம் முக்கியமாக, மையமாக இருக்கின்றனவோ அவற்றிற்கு டாக்டர் பார்க் அவர்கள் தன்னை முற்றிலும் அர்ப்பணித்திருந்ததை அவருடைய வாழ்க்கையும் ஊழியமும் எடுத்துக் காட்டுகின்றன. அவருடைய வாழ்க்கைப் பணி, நம்முடைய கர்த்தராகிய தேவனுடைய உடன்படிக்கை உண்மைத்தன்மையின் வம்சவரலாற்றை முன்வைக்கிறது.”

—டாக்டர். வாரன் கேஜ் நாக்ஸ் வேதாகமக் கல்லூரி கௌரவப் பேராசிரியர்